ஹரி ஓம்

முனையடுவார்  நாயனார் "அறைகொண்ட வேல் நம்பி  முனையடுவார்க்  கடியேன்”-  திருத்தொண்டத்  தொகை

பெயர்: முனையடுவார் நாயனார் குலம்: வேளாளர் பூசை நாள்:பங்குனி                            பூசம் அவதாரத் தலம்: நீடூர் முக்தித் தலம்: நீடூர்

முனையடுவார் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர்.

Title 2

சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச்  சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர்;

போரில் பகைவர்களுக்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணைவேண்டினால் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையாற் கூலி பேசிக்கொண்டு அவர்களுக்காகப் போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித்துக் கொண்டிருந்தார்.

போர் முனையிற் கொல்லும் தொழிலே புரினும் அடியர்க்கு அமுதளித்தல் பெரும்பேறாம். முனையடுவார் நாயனார் குருபூசை நாள்; பங்குனிப் பூசம்

நற்பவி ஸ்ரீ புஜண்ட நாகநாத சித்தர் அதிஷ்டானம் வடவன்பட்டி